close
Choose your channels

'உங்ககிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிக்கிறாங்க'.. ஏடிகே சொன்னது யாரை?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்க கிட்ட பேசுறதுக்கு நிறைய பேரு யோசிக்கிறாங்க என ஏடிகே நாமினேஷன் செய்யும்போது போட்டியாளர் ஒருவரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது என்பதும் இந்த ஓப்பன் நாமினேஷனில் நாமினேஷன் செய்யப்படுபவர் மீது கிரீம் தடவ படுகிறது என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம் 

இந்த நிலையில் இந்த நாமினேஷனில் ஏற்கனவே குயின்ஸி, ரக்சிதா, கதிரவன், மைனா, ஜனனி ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ள நிலையில் தனலட்சுமியை ஏடிகே நாமினேட் செய்கிறார்

அவர் நாமினேஷனுக்காக காரணம் கூறியபோது, ‘உங்க கிட்ட பேசுவதற்கு நிறைய பேர் யோசிக்கிறாங்க என்று தெரிகிறது. சில விஷயங்கள் சொல்லும்போது நீங்கள் கோபப்படுகிறீர்கள். குறிப்பாக அந்த கேப்டன் டாஸ்க் நடந்தபோது எல்லாரும் சேர்ந்து ஒருவரை கேப்டனாக தேர்வு செய்யும்போது... என ஏடிகே பேசியபோது தனலட்சுமி குறுக்கிட்டார். 

அப்போது ஏடிகே, ‘நான் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் என்று கூறியபோதும் தனலட்சுமி தொடர்ந்து குறிக்கிட்டு தன்னுடைய கருத்தை சொல்ல முன்வருகிறார். இதனை அடுத்து ஏடிகே, ‘இதனால் தான் உங்களை நான் நாமினேட் செய்கிறேன்’ என்று கூறி அவரது முகத்தில் க்ரீமை தடவுகிறார். 

இந்த நிலையில் தற்போதைய நிலையில் குயின்ஸி, ரக்சிதா, கதிரவன், மைனா, ஜனனி, தனலட்சுமி என ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.