close
Choose your channels

இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது போச்சே.. கதறி அழுகும் தனலட்சுமி!

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இத்தனை வருடமாக கஷ்டப்பட்டது போச்சே என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான தனலட்சுமி கதறி அழும் காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வரும் டாஸ்க்கில் இருந்து ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என பிக்பாஸ்அறிவித்திருந்தார்.

அந்த ஐந்து நபர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் அசீமுக்கு விக்ரமன் டாஸ்க் கொடுத்த நிலையில் இரண்டாவது புரமோவில் தனலட்சுமிக்கு மணிகண்டன் டாஸ்க் கொடுக்கிறார்.

அவர் அதில் ஒரு பெரிய சீட்டு கம்பெனியில் நீ காசு போட்டிருக்கின்றாய், அந்த பணம் ஏமாற்றப்பட்டுவிட்டது. உன் பொண்ணோட கல்யாணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்காக சேர்த்து வைத்த காசு மொத்தமாக காலி என்பதால் உன் பொண்ணோட திருமணம் கேள்விக்குறியாகிறது. இதனை அடுத்து உன்னுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்ட வேண்டுமென மணிகண்டன் டாஸ்க் கொடுக்கின்றார்.

இதனையடுத்து தனலட்சுமி ‘இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது போச்சே' என கதறி அழுதவாறு நடிக்கும் காட்சி இரண்டாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது. அவரது நடிப்பை பார்த்து சக போட்டியாளர்கள் கண்ணீர் சிந்தும் அளவுக்கு சென்றுள்ளனர் என்பதால் அவரது நடிப்புக்கு நிச்சயம் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.