close
Choose your channels

ஏன் இவங்களையெல்லாம் உள்ளே அனுப்பினோம்ன்னு ஆயிருச்சு.. Evicted போட்டியாளர்கள் குறித்து கமல்

Saturday, January 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்று 97வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்து சில குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியே என்ன நடக்கின்றது என்பதை உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் கூறியதால் பிக்பாஸே எச்சரிக்கை செய்யும் அளவுக்கு ஆனது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் இது குறித்து கூறிய போது ’பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது கம்பர் சொன்னது, ஆனால் ஏன் கூடினோம், ஏன் பேசினோம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

தியாகம் என்பது விரும்பி செய்வதாகும், கேட்டு வாங்குவது தானம், வலிய புகுத்துவது அது வன்மம். இது மூன்றும் வேறு வேறு என்பதை வீட்டில் உள்ளவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும். யார் சொல்லுவார்? நாம்தான் சொல்ல வேண்டும் என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவடைகிறது.

இதனை அடுத்து எவிக்டட் போட்டியாளர்களை இன்று கமலஹாசன் வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.