close
Choose your channels

இதுதான் மோசமான சீசன்.. கமல் போட்ட வழக்கால் அதிர்ந்த போட்டியாளர்கள்

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை வந்த பிக்பாஸ் சீசன்களிலே மோசமான சீசனாக இந்த சீசன் மாறி வருகிறது என கமல்ஹாசன் போட்டியாளர்கள் மீது வழக்கு தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றது என்பதும் இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் விளையாட்டாக எடுத்துக் கொண்டது இந்த டாஸ்க்கையே காமெடியாக மாற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த டாஸ்க் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன், ‘இந்த சீசன் தான் மிக மோசமான சீசனாக மாறும் என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஒரு வழக்கை தொடுக்கின்றேன் என்று கூறிய கமல்ஹாசன், ‘பிக்பாஸ் வீட்டில் தட்டுக்கள் மற்றும் கப்புகளை கழுவாதவர்கள் யார் என்பதைக் கூட யாரும் சொல்லவில்லை, குற்றவாளிகள் யார் என்பதை கூட சொல்லாமல் தீர்ப்பு கூறியுள்ளீர்கள்.

மிகவும் பாதுகாப்பாக அனைவரும் விளையாடி வருவதால் இதுவரை நடந்த சீசன்களில் இதுதான் மிகவும் மோசமான சீசனாக மாறும் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து போட்டியாளர்கள் தங்களது பொறுப்பை இனிமேலாவது உணர்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.