close
Choose your channels

பொருட்களை போட்டு உடைத்த குயின்ஸி.. பிக்பாஸ் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கதிரவன் மீது இருக்கும் கோபத்தில் குவின்ஸி பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்ததை அடுத்து பிக்பாஸ் அவருக்கு நூதனமான தண்டனை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது நீதிமன்ற டாஸ்க் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த டாஸ்க்கில் குயின்ஸி மற்றும் கதிரவன் இடையே காரசாரமான மோதல் நடந்தது.

இந்த மோதலை அடுத்து குயின்ஸி ஆத்திரத்தில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பொம்மையை போட்டு உடைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பிக்பாஸ் குயின்ஸியை அழைத்து நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு கேமரா முன் சென்று இனிமேல் பிக்பாஸ் வீட்டு பொருட்களை உடைக்க மாட்டேன் என மன்னிப்பு கேளுங்கள் என்று கூறுகிறார்.

மேலும் கேப்டன் மைனாவிடம், குயின்ஸி சரியாக மன்னிப்பு கேட்கிறாரா என்று பாருங்கள் என்றும் கூறுகிறார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.