close
Choose your channels

இந்த வாரம் டபுள் எவிக்சன்.. வெளியேறுவது இவங்க ரெண்டு பேர் தானா?

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஜி பி முத்து தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தவாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராம் மற்றும் ஆயிஷா குறைவான வாக்குகள் பெற்று உள்ளதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த வாரம் அதிக வாக்குகளைப் பெற்று வலிமையான போட்டியாளராக அசீம் தொடர்ந்து இருக்கிறார். அசீமை அடுத்து ஜனனி, கதிரவன், ஏடிகே ஆகிய 4 பேர் அடுத்தடுத்து வாக்குகள் பெற்றுள்ளனர். ஆயிஷா, ராம் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதால் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.