close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசனை திடீரென சந்தித்த விக்ரமன்.. என்ன காரணம்?

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடுக்கிடும் திருப்புமாக அசீம் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றது வெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசனுக்கே கூட இந்த முடிவு அதிர்ச்சியை அளித்ததாக கூறப்பட்டது.

அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுத்தாலும் விக்ரமனை தோளில் தட்டி அறம் வெல்லும் என்று கமல்ஹாசன் கூறியதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது முதல் முறையாக கமல்ஹாசனையை விக்ரமன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து விக்ரமன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்து, ‘மதிப்புக்குரிய அண்ணன் திரு கமலஹாசன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை ஏராளமான பிக் பாஸ் ரசிகர்கள் ரசித்து பாராட்டி வருகின்றனர். கமலஹாசனை விக்ரமன் சந்தித்ததை அடுத்து விரைவில் அசீமும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.