close
Choose your channels

சொன்னப்படியே போலீஸில் புகார் அளித்த விஜே மகேஸ்வரி.. சிக்க போவது யார் யார்?

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி தன்னை பற்றியும் தனது மகனைப் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னபடி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி என்பதும் இவருக்கும் அசிமுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பலமுறை சண்டை வந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய பின்னர் விருந்தினராக மீண்டும் விஜே மகேஸ்வரி சென்றபோது கூட அசீம் உடன் சண்டை போட்டார் என்பதும் இதனால் அசீம் ரசிகர்கள் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இன்றி விஜே மகேஸ்வரியின் மகன் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் பதிவான நிலையில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ’நச்சு நிறைந்த ஆண்கள் உள்ள இந்த உலகத்தில் ஒரு போராளியாக என் மகன் இருப்பதற்கு நன்றி, இந்த உலகை பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறார் என்று நான் நம்புகிறேன், அதற்காக நான் பெருமை கொள்கிறேன், அம்மா உன்னுடைய பாதுகாப்புக்காக இருப்பேன் என்றும் மகனுக்காக பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சொன்னபடியே விஜே மகேஸ்வரி தன்னை பற்றியும் தன்னுடைய மகன் பற்றியும் அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அது குறித்த ரசிதையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து யார் யார் சிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.