காஜலின் அதிரடி கேள்வியால் வசமாக மாட்டிய ஆரவ்

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு புதுமுகம் அறிமுகமாகி வருகின்றனர். நேற்று முன் தினம் சுஜா வருணே, நேற்று ஹரிஷ் ஆகியோர் அறிமுகமான நிலையில் இன்று நடிகை காஜல் பசுபதி புதிய பங்கேற்பாளராக நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய புரமோவில் காஜல் ஆரவ்விடம் ஒரு அதிரடி கேள்வியை கேட்கின்றார். 'உலகமே விரும்புகிற ஒரு பெண்ணை நீங்கள் ஏன் வேண்டாம் என்று கூறினீர்கள்' என்பதுதான் அந்த கேள்வி. இந்த கேள்வியால் ஆரவ் அதிர்ச்சியில் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் நெளிகிறார். ஒவ்வொரு ஓவியா ஆர்மி படையினர்களும் இதுவரை சமுக வலைத்தளங்களில் கேட்ட கேள்விதான் என்றாலும் ஆரவ்விடம் நேருக்கு நேர் காஜல் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் புரமோ வீடியோவில் வரும் காட்சிகள் நிகழ்ச்சியில் மொக்கையாகத்தான் இதுவரை இருந்துள்ளது. இந்த கேள்வியும் அதேபோல் ஒன்றாகிவிடுமா? அல்லது நிகழ்ச்சியின் திருப்பத்திற்கு காரணமாக இருக்குமா? என்பதை இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நடிகர் விவேக்கின் விவேகமான சமூக சேவை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் நகைச்சுவையில் சமுதாயத்தில் உள்ள குறைகள் குறித்த விழிப்புணர்வை புகுத்தியதால்தான் சின்னக்கலைவாணர் என்ற பட்டம் நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்தது.

தென்னிந்திய திரையுலகின் முதல் முயற்சி: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த பெருமை

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' குறித்த சிறப்பு அப்டேட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம்...

போயஸ் கார்டனை அடுத்து திடீரென பரபரப்பான கொடநாடு எஸ்டேட்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான 'வேதா இல்லம்' நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார்.

பிக்பாஸ்: ஆட்டோவில் வந்து இறங்கும் நடிகை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்றியவுடன் அவரது வெற்றிடத்தை நிரப்ப சேனல் நிர்வாகமும் அவ்வப்போது ஆட்களை உள்ளே அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்தான் கொஞ்சம் கூட மெருகேறவே இல்லை...

16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது முதியவர்!

அரபு நாடுகளை சேர்ந்த முதியவர்கள் இந்திய சிறுமிகளை திருமணம் செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்து செல்வதாக அவ்வப்போது புகார்கள் வந்துள்ள நிலையில் தற்போது ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தனது நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக திடுக்கிடும் புகார் ஒன்று வந்துள்ளது...