close
Choose your channels

பிந்துவிடம் அறை வாங்குவாரா சினேகன்?

Thursday, August 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் நொந்து நூலாகி இருக்கும் நிலையில் இனிமேல் பிக்பாஸையே பார்க்க மாட்டேன் என்று பலர் டுவிட்டரில் கூறி வருகின்றனர். இதை புரிந்து கொண்ட சேனல் நிர்வாகம் இன்று பூ ஒன்று புயலானது போல் அமைதியாக அப்பாவியாக இருந்த பிந்துவை ஆங்காரமாக காட்டியுள்ளனர்.
சினேகன் ரொம்ப ஓவரா பண்றாரு. ஒருத்தரை கையை நீட்டி அடிக்க கூடாதுன்னு பார்க்குறேன், இல்லைன்னா அவரை அறைஞ்சிடுவேன்' என்று இன்றைய புரமோவில் கூறுகிறார் பிந்துமாதவி. பிந்துமாதவி கோபப்படும் அளவுக்கு கட்டிப்பிடி வைத்தியர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று தெரியவில்லை. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை மூடு இருந்து பார்ப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
நேற்று தான் நடிகை சுஜா வருணே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். வந்தவுடனே பிந்து-சினேகன் சண்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேயறைந்தது காணப்படுவது மேலும் ஒரு காமெடியாக உள்ளது. இரண்டு பக்கமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பம் முதல் நல்லவர் போல் நடித்துவரும் நரிக்குணம் கொண்ட சினேகனின் சாயம் வெளுக்கும் நாள் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. கமல்ஹாசன் கூட நம்பிய இவரது ஓவர் ஆக்சனுக்கு முடிவும் நெருங்கிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.