அஜித், விஜய் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட காயத்ரி

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதிலும் இன்னும் ஒருசிலர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. குறிப்பாக ஓவியாவின் மனநிலை தடுமாற்றத்திற்கு காரணமான காயத்ரி, ஜூலி, ஆரவ் மீதான கோபம் இன்னும் தீரவில்லை.

இந்த நிலையில் காயத்ரி தேவையில்லாமல் தனது டுவிட்டரில் எதாவது பதிவு போட்டு வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார். அவர் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருப்பது அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் 'மெர்சல்' இசை வெளியீடு குறித்து பதிவு செய்து விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட காயத்ரி தற்போது 'விவேகம்' படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நூற்றுக்கணக்கான கமெண்டுக்கள் பதிவாகியுள்ளது. ஆனால் ஒரு பதிவு கூட பாசிட்டிவ் ஆக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதால் 'விவேகம்' படம் எப்படி என்று கூட காயத்ரி அடுத்த டுவிட்டை போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றிய காயத்ரியை ஆடியன்ஸ் கண்டுகொள்ளவே இல்லை. பரணி வரும்போது எழுந்த கைதட்டல் ஓசை மீதி நால்வருக்கும் கிடைக்கவில்லை என்பது இன்னும் ரசிகர்களின் கோபம் தீரவில்லை என்பதையே காட்டுகிறது.

More News

சென்னையில் 'விவேகம்' செய்த புதிய சாதனை

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'விவேகம்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூலை இந்த விமர்சனங்கள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களே சாட்சியாக உள்ளது...

விஜயகாந்த் வீட்டுக்கு வந்த புதிய விருந்தினர் யார் தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் தற்போது தீவிர அரசியலில் இல்லாதபோதிலும் அவ்வப்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு இன்று முதல் ஒரு புதிய விருந்தினர் வந்துள்ளர்...

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பரபரப்பு நடிகை

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்தும், அதிக வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் நடித்த மற்றொரு படமான 'புரியாத புதிர்' படம் வெளியாகவுள்ளது...

பிக்பாஸ் வீட்டில் ரைசா புரிந்து கொண்ட உண்மை

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ரைசா வெளியேறினார். நேற்றைய ரைசாவின் எவிக்சன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜூலி-ஆர்த்தி?

பிக்பாஸ் வீட்டில் நேற்று ரைசா வெளியேறிவிட்டதால் தற்போது வீட்டின் உள்ளே புதிய வரவுகள் நான்கு பேர், பழைய பங்கேற்பாளர்கள் நான்கு பேர் என எட்டு பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு புதிய வரவுகள், இல்லை பழைய பங்கேற்பாளர்கள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளனர்...