இனிமேல் சைலண்ட் மோட் தான்: ஆர்த்தியின் திடீர் முடிவு ஏன்?

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நடிகை ஆர்த்தி, வெளியே வந்தபின்னரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தான் போலி என்று கூறிய ஜூலி உண்மையிலேயே போலியானவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆர்த்தி கூறியதாக சமூக வலைத்தளங்களிலும், யூடியூப் வீடியோவின் கமெண்ட்களிலும் பல தவறான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை கூறி வருவதால் இனிமேல் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டும் இருக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தவறாக எதுவுமே கூறவில்லை என்றும் இனிமேல் கூற மாட்டேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் குறித்து அவர் எதுவும் கூறப்போவதில்லை என்று கூறினாலும், ஓவியாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

More News

பெப்சி வேலைநிறுத்தத்தில் திடீர் திருப்பம்: ஆர்.கே.செல்வமணி முக்கிய அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிம்புவின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற டெக்னீஷியன்

சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அழகானவன்' படத்திற்கு பின்னர் அவருடைய அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார்...

ஓவியாவுக்கு வையாபுரி திடீர் ஆதரவு: பிக்பாஸ் வீட்டில் திருப்பம்

பிக்பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார் ஓவியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாருமே இல்லாததால் கடந்த சில நாட்களாக அவர் சோகமாகவே காணப்பட்டார்...

ஃபைனான்சியர் போத்ரா மீது பாரிவேந்தர் பரபரப்பு புகார்

பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.