பிக்பாஸ் 2: முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆர்மிகள்

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர் படை , ஓவியா ஸ்வீட்ஸ் என ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் தனி ஹெஷ்டேக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் ஓவியா ஆர்மி இன்று வரை ஸ்பெஷல். ஓவியா குறித்த செய்திகளை அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐந்து பேர்களுக்கு நேற்றே நெட்டிசன்கள் ஆர்மிகளை ஆரம்பித்துவிட்டனர். யாஷிகா ஆனந்த் ஆர்மி, மும்தாஜ் ஆர்மி, ரித்விகா ஆர்மி, ஜனனி ஆர்மி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆர்மி என நெட்டிசன்களின் சேட்டை ஆரம்பமாகிவிட்டது.

இதில் யாஷிகா ஆர்மியில்தான் தற்போது அதிகளவு ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் யாஷிகாவிற்கு முதல் போட்டியாளர் மற்றும் இளம் போட்டியாளர் என்ற பெருமை வேறு உள்ளது. யாஷிகாவை அடுத்து மும்தாஜ் ஆர்மியும் ஜனனி ஆர்மியும் பரபரப்பில் உள்ளது. ஆனாலும் எத்தனை ஆர்மி வந்தாலும் எங்கள் ஓவியா ஆர்மிக்கு ஈடு இணையாகாது என்று அவரது ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளதால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது.