close
Choose your channels

நான் வெளியே வந்ததும் மிகவும் மனம் வருத்தப்பட்டது இதற்குதான்: ஆரி ஆதங்கம்

Sunday, January 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இந்த ஒரு விஷயத்துக்காக தான் மிகவும் வருத்தப்பட்டேன் என்று ஆதங்கத்துடன் ஆரி பேட்டி அளித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும் சரி, முடிந்த பின்னரும் சரி பிக்பாஸ் போட்டியாளர்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

குறிப்பாக ஆரியிடம் சண்டை போட்டவர்கள், ஆரியை விமர்சனம் செய்த போட்டியாளர்களை ஆரி ஆர்மியினர் பெயரில் செய்து வரும் விமர்சனங்கள் படுமோசமாக உள்ளது. இதுகுறித்து ஆரி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது ’தரம் தாழ்ந்த விமர்சனங்கள் என்பதை யார் செய்தாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நான் வெளியே வந்தவுடன் இந்த ஒன்றுக்காக தான் மிகவும் வருத்தப்பட்டேன்

ஏனெனில் எனது சக போட்டியாளர்களிடம் எனக்கு கருத்துவேறுபாடு இருந்தாலும் அவர்களை நான் ஒருபோதும் விட்டுகொடுக்க முடியாது. அவர்கள் இல்லாமல் நானில்லை. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தை இருக்கிறது. எனவே முகம் தெரியாமல் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது

நான் வெளியே வந்தவுடன் எனது பெயரில் இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை கேள்விப்பட்டு மிகவும் மனம் வருத்தப்பட்டேன். எனது பெயரில் இருந்தாலும் சரி வேறு யாருடைய பெயரில் இருந்தாலும் சரி தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார் ஆரியின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.