close
Choose your channels

பிக்பாஸ் முடிந்தும் நிஷாவை விடாத ரசிகர்கள்!

Thursday, January 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

105 நாட்களாக மக்களின் அமோக வரவேற்பை பெற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியின் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே

ஆரியின் வெற்றியை உலகில் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் கொண்டாடிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் ஒரு சிலருக்கு மட்டும் அதிருப்தியாக இருந்தது என்பது ஆரி கோப்பையை வாங்கியபோது அவர்களது முக பாவனையில் இருந்தது தெரியவந்தது

குறிப்பாக அன்பு குரூப்பில் இருந்து 6 பேரும் ஆரியின் வெற்றியை ரசிக்கவில்லை என்பது அவர்கள் பிக்பாஸ் மேடையில் இருந்த போது அவர்களது முகமே காட்டி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சனம்ஷெட்டி மற்றும் அனிதா ஆகிய இருவரும் ஆரி வெற்றியாளர் என்று அறிவித்தவுடன் எழுந்து நின்று சந்தோசமாக கைதட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி கோப்பையை வென்று நான்கு நாட்கள் கழித்து நிஷா தனது வாழ்த்துக்களை ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ’இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று ஆரிக்கு நிஷா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் ஒரு நெட்டிசன், ‘சும்மா நடிக்காதே ஆரி ப்ரோ டைட்டில் வாங்கும்போது உன் முகம் எப்படி இருந்தது என்று பார்த்தோம்’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நிஷா, ‘அது போலி’ என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் முடிந்தும் நிஷாவை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விடாமல் துரத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.