பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: குத்தாட்டம் போட்டு கலந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்கும் என்று ஆணித்தரமாக கூறி கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை தாக்குபிடித்தவர் அர்ச்சனா. அவருடைய பாணி சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியால் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தற்போது விஜய் டிவியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா, சமீபத்தில் தனது வீட்டில் நடந்த ஒரு விசேஷத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது அந்த நிகழ்ச்சிக்கு ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா, நிஷா, ஆஜித், ரமேஷ், சோம்சேகர் உள்பட பலர் வருகை தந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஜாலியாக நடந்தது என்பதும் ஆரி உள்பட அனைவரும் குத்தாட்டம் ஆடிய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா தனது தங்கை வளைகாப்பு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக பெருமை கொள்வதாக கூறியிருந்தார்.

More News

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற விதிமுறை தற்போது இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் அதிக திரைப்படங்கள்,

பவர்ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழில் ஒரே ஒரு படம்: மும்பையில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்துள்ள பிரபல நடிகை அதிலும் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை

அஜித்தின் சைக்கிள் ரைட் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள்

பொதுத்தேர்வு இன்றி பாஸ் என முதல்வர் அறிவிப்பு: எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி பாஸ்