close
Choose your channels

எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்!

Sunday, May 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வந்த பிரபலம் ஒருவர் தனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள், ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் சோட்டாபீம் பார்த்துக் கொண்டிருப்பதாக புலம்பி பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரி இருந்த நிலையில் பாலாஜி ரன்னரானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் சமூகவலைதளங்களில் பாலாஜி ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் ’தனது அனைத்து நண்பர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் ஆனால் நான் மட்டும் இன்னும் போகோ சேனலில் சோட்டா பீம் பார்ப்பதில் பிசியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கமெண்ட் அளித்துள்ள அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்யுக்தா, ‘லாக்டவுனில் சரியான வேலையைத்தான் செய்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்த பதிவிற்கு ஆஜித், கேப்ரில்லா உள்ளிட்டவர்களும் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.