பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்றவர்கள்.. பட்டியலில் டைட்டில் வின்னர் இல்லையே !


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் முத்துக்குமரன் டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் அவருக்கு 40 லட்சத்திற்கும் அதிகமான பரிசு தொகை கிடைத்தது என்பதும் தெரிந்தது. மேலும் இரண்டாம் இடத்தில் சௌந்தர்யா, மூன்றாம் இடத்தில் விஷால் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த சௌந்தர்யா, ஒரு எபிசோடுக்கு ரூ.12000 சம்பளம் பெற்ற நிலையில் 105 நாட்களுக்கு அவருக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் சம்பளம் வாங்கி இருப்பதாக தெரிகிறது.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் 70 நாட்கள் இருந்த சத்யா 14 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். விஜே ஆனந்தி 63 நாட்கள் இருந்து 15 லட்சத்தி 75 ஆயிரம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாம் இடம் பிடித்த விஜே விஷால் மொத்தம் 105 நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருண் பிரசாத் மொத்தம் 98 நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு 19 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாம்.
அன்சிதாவுக்கு 21 லட்சம், பவித்ராவுக்கு 21 லட்சம், ஜாக்குலினுக்கு 25 லட்சத்து 25 ஆயிரம், தீபக்கிற்கு 29 லட்சத்து 70 ஆயிரம் என சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர் ரஞ்சித் தான் என்ற நிலையில் அவர் ஒரு நாளைக்கு 50,000 சம்பளம் வாங்கிய நிலையில் அவருக்கு மொத்தம் 38 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள விஷயத்தில் டைட்டில் வின்னர் முத்துக்குமார் பெயர் முதல் 10 இடத்தில் இல்லை என்றாலும் அவருக்கு டைட்டில் பட்டம் வென்றதற்கு 40 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments