'பத்தல பத்தல' பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பத்தல பத்தல’ என்ற பாடல் நேற்று வெளியானது.

இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி பாடியுள்ள நிலையில் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலில் உள்ள சில வரிகள் மத்திய அரசை விமர்சனம் செய்வதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டாலும் இந்த பாடலை கமல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் குவிந்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வழக்கம் போல் ஒரு பாடல் ஹிட்டாகி விட்டால் அந்த பாடலுக்கு திரையுலக, சின்னத் திரை உலக, மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வைரலாகும். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலங்களான ஆஜித் மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் ’பத்தல பத்தல’ பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ளனர். அதேபோல் இன்னொரு வீடியோவில் சாண்டி மற்றும் அவரது மச்சினி சிந்தியா இந்த பாடலுக்கு ஆடியுள்ளார்கள். இந்த பாடலுக்கு சாண்டி தான் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சினிமாவுக்கு வரும் ஜெயராம் குடும்பத்தின் 4வது நபர்: குவியும் வாழ்த்துக்கள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் சினிமாவில் நடித்துள்ள தற்போது நான்காவது நபரும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பெண் இயக்குனரின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர் இயக்கும் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்!

சியான் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணைய விக்ரம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரிலீஸ் தேதியை மாற்றி பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

வதந்தியால் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: பிரபல நடிகை புலம்பல்

வதந்தியால் தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லை என பிரபல நடிகை ஒருவர் புலம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.