close
Choose your channels

எதிர்பாராத திருப்பம்: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது இவரா? 

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் நாளை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாவனி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் நாளை வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிப்போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களில் ஒருவராக தாமரை இருப்பார் என்றும், அவருக்கு டைட்டில் பட்டம் வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறுவது எதிர்பாராத திருப்பமாக உள்ளது.

மேலும் 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நீங்கள் வெளியே செல்கிறார்களா என சிபி, தாமரையிடம் திரும்பத் திரும்ப கேட்டபோது ’நான் இந்த வீட்டில் இருக்கப் போகிறேன், இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் இருக்கிறது என்று கூறிய தாமரை இன்று வெளியேற்றப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலம் காரணமாக அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அவருக்கு இதுவரை ஆதரவு அளித்து ஓட்டளித்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.