பிசினஸ் ஆக மாறிவிட்டதா பிக்பாஸ்? பேக்கேஜ் பேரம் பேசப்படுவதால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களில் உண்மையாகவே பார்வையாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர், அடுத்தடுத்த சீசன்களில் போட்டியாளர்கள் பி.ஆர். வைத்து ஆதரவை திரட்ட ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள சான்ஸ் கிடைத்ததும் உடனே பி.ஆர். ஏற்பாடு செய்து, அதற்காக ஒரு பெரிய தொகையையும் ஒதுக்கி, சம்பந்தப்பட்ட போட்டியாளருக்கு ஆதரவாக பதிவுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதற்காக சில குழுக்கள் அமைத்து பேக்கேஜ்கள் பேரம் பேசப்பட்டு, தினந்தோறும் அந்த போட்டியாளருக்கு ஆதரவான கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில், தற்போது எட்டாவது சீசனிலும் ரஞ்சித், அர்னவ், ஜாக்குலின் ஆகியோர் பி.ஆர். வேலை செய்வதற்கு முன்னேற்பாடு செய்துவிட்டு தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சார்பாக சில நபர்கள், முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை விமர்சனம் செய்பவர்களையும் அணுகி பேக்கேஜ் பேரம் பேசுவதாகவும், இதற்காக பெரும் தொகை கை மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோ ரியாலிட்டியாக இல்லாமல், வலுக்கட்டாயமாக கருத்துக்கள் திணிக்கப்படுவது அந்த ஷோவின் மரியாதையை கெடுக்கும் வகையில் இருக்கும் என்று இந்த நிகழ்ச்சியை உண்மையாக நேசித்து பார்க்கும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments