'நான் சும்மா இருந்தா சும்மா இருக்க மாட்டேன்': வைரலாகும் கவின் வீடியோ

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்பு இல்லாததால் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருசில வீடியோக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பல வீடியோக்கள் ஜாலியாகவும் உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை இந்த வீடியோக்கள் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் கடந்த சில வருடங்களுக்கு முன் கவினின் நண்பர் ஒருவர் பீரோவில் உள்ள பேண்ட் ஒன்றை எடுத்து மின்விசிறியில் இருக்கும் தூசிகளை துடைக்கும் காட்சிகள் உள்ளன. இதற்கு பழி வாங்கும் வகையில் கவினும் அவரது நண்பரின் பேண்ட் ஒன்றை எடுத்து வீடு முழுவதும் துடைத்து, மொட்டை மாடியையும் துடைத்து அந்த பேண்டை ஒருவழியாக்கிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘சில வருடங்களுக்கு முன் அரசு உத்தரவு இல்லாமலேயே நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அப்போது செய்தவை தான் இந்த வீடியோவில் இருப்பது. இதில் இருந்து தெரிய வருவது என்னவெனில் நான் சும்மா இருந்தால் சும்மா இருக்க மாட்டேன், பழி வாங்கிவிடுவேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

More News

பரிசோதனையில் ஜெர்மனி கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

ஜெர்மனியின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருக்கிறது.

மனிதம் வாழ்கிறது; ஒரேநாளில் 70 ஆயிரம் தொழிலாளர்களின் பசியைப்போக்கும் தன்னார்வ அமைப்பு!!!

மும்பை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் பசியை போக்கும்

தளபதி விஜய் மகன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி?

தளபதி விஜய் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கும் முதல் படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ராணுவ வீரரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எளிமையின் சின்னமாக இருப்பதாகவும் அவரிடம் சமூக வலைதளம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேற்றபடுவதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்

உலகின் தலைசிறந்த சொல்லை செய்து காட்டுவோம்: சிவகார்த்திகேயன்

கொரோனா வைரஸ் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் கொரோனாவின் சீரியஸ் குறித்து இன்னும் பலர் அறியாமல் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.