close
Choose your channels

துபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் காதலர்களாக மாறிய ஜோடி தற்போது ஜாலி பயணமாக துபாய் சென்றுள்ளதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியின் 14 வது சீசனில் கலந்து கொண்டவர்கள் அலய் மற்றும் ஜாஸ்மின். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் காதலித்து கொண்டார்கள் என்பதும் அதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னரும் அவர்கள் தங்களுடைய காதலை தொடர்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஜாஸ்மின் மற்ற அலய் இருவரும் இணைந்த புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இருவரும் துபாய்க்கு ஜாலி பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் துபாய் பாலைவனத்தில் விதவிதமான போஸ்களில் எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் ஜாஸ்மின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருவரும் துபாயில் இருக்கும் விதவிதமான புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றன.

பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் ஜாஸ்மின் 99வது நாளிலும் அலய் 143 வது நாளிலும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.