close
Choose your channels

'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்!

Saturday, August 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதாவது ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக அவர் அடிக்கடி டுவிட்டரில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார்.

ஒருசில விஷயங்களை நேரடியாகவும் ஒருசில விஷயங்களை மறைமுகமாகவும் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது டுவிட்டரில் ’சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது டுவிட்டரில் சுதந்திரம் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.