close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்குள் அரசியல் கட்சிகள்: அமர்க்களமாகும் மாநாடு!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மற்ற சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 5 வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீசனில் அணியாக யாரும் விளையாடாமல் தனித்தனியாக விளையாடி வருகின்றனர் என்பதும், இது குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் பெருமையுடன் கூறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீசனில் பல வித்தியாசமான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதுவரை இல்லாத வகையில் அரசியல் குறித்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பிக்பாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இதுவரை இந்த வீடு எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருக்கிறது. பிரச்சினைகளை பிரச்சாரமாக மாற்றி பார்த்து இருக்கின்றதா? பலவீனங்களையும் பலமாக மாற்ற காத்திருங்கள். ஏனெனில் இன்று முதல் இந்த பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப்போகிறது. போட்டியாளர்கள் அனைவரும் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து மூன்று அரசியல் கட்சிகளாக சஞ்சீவ் உறுப்பினர்களை பிரிக்கிறார். இதனையடுத்து இந்த வாரம் அரசியல், மாநாடு என அமர்க்களப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos