close
Choose your channels

உடல்நிலை மோசமானதால் திடீரென வெளியேறிய பிரியங்கா: ஃபினாலேவுக்கு வருவாரா?

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெற்றிகொண்டு 50 லட்ச ரூபாய் பணத்தை வெல்வது ராஜூவா? அல்லது பிரியங்காவா? என்ற கேள்வி தான் தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென பிரியங்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானதை அடுத்து பிக்பாஸ் அவரை மெயின் டோர் வழியாய் அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் பிரியங்கா இன்னும் இரண்டு நாள் தானே, நான் சமாளித்து கொள்வேன் என்று பிக்பாஸ் இடம் கூறியும், ‘இல்லை உங்கள் உடல்நிலை காரணத்தால் நீங்கள் கண்டிப்பாக வெளியே வரவேண்டும்’ என்று பிக்பாஸ் கூறியதன் காரணமாக அவர் மருத்துவமனை சென்றிருக்கிறார். 
இதனால் நேற்றைய பொங்கல் நிகழ்ச்சி எதிலும் பிரியங்கா கலந்து கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நேற்று நிகழ்ச்சியின் இறுதியில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டதோடு நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரியங்கா மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் இன்றைய நிகழ்ச்சியிலும் அவர் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தேறி கண்டிப்பாக ஃபினாலேவுக்கு வந்து விடுவார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அவருடைய ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உடல்நிலை தேறி பிரியங்கா ஃபினாலேவில் கலந்து கொள்வாரா? பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.