கணவரை பிரிந்து வாழ இதுதான் காரணமா? பிக்பாஸ் ரக்சிதா குறித்த அதிர்ச்சி தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ரக்சிதா தனது கணவரை பிரிந்து வருவதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அந்த காரணத்தை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 21 போட்டியாளர்களில் ஒருவர் சீரியல் நடிகை ரக்சிதாவும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகின்றனர் . இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. இருவருடைய சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவருத்தம் என்றும் அதனால்தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
ரக்சிதா குழந்தை பெற வேண்டுமென்றால் அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியாது என்று ரக்சிதா கூறியதால் தான் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இருவரும் இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments