close
Choose your channels

பிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா!

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர்

அறிமுக இயக்குனர் சந்துரு எனபவர் இயக்கும் த்ரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு கொலை மர்மமான முறையில் நடப்பதும் அந்தக் கொலையின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கும் இந்த படத்தில் ரமா, மைம்கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சதீஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.