தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக்பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்டு போட்டியாளராக தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ’ என்று பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சி நடிகை பிரீத்தி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் இருவரும் தற்போதும் கூட சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ் இன்று என்ட்ரி ஆகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் என்பதால் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவருடைய மனைவி ப்ரீத்தி, ‘தன்னுடைய கணவரை வெளியே இருக்கும் போது எப்படி ரசித்துக்கொண்டு இருந்தேனோ, அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் அவர் இருப்பதை ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும், ஆனால் தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருடைய பதிவுக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் அளித்து வருகின்றனர் என்பதும் சஞ்சீவ் கண்டிப்பாக டைட்டிலை வெல்வார் என்றும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 'தளபதி 66' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே.

பிரபல நடிகரின் 522வது படத்தில் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் நடிக்க உள்ள 'கனெக்ட்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை 'மாயா' படத்தை இயக்கிய

'மாநாடு' படம் எப்போது ரிலீஸ் என்றே எனக்கு தெரியாது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சிம்பு நடித்த 'மாநாடு' படத்திற்காகவே திரையரங்குகளில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான

'மாநாடு' ரிலீசுக்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் இவரா? வைரலாகும் டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்!

சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் பதிவு செய்த டுவிட்டில், 'இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.