இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள் சிலர் ரவுண்டு கட்டி வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலாஜி, யார் யாரெல்லாம் ஹீரோ, ஹீரோயின் ஆகனுமோ, அவங்க எல்லாம் என்னுடன் சண்டைக்கு வாருங்கள் என சொடக்கு போட்டு கூறினார். ஆனால் நேற்று ஆரியிடம் வாக்குவாதம் செய்தபோது ’தான் அவ்வாறு கூறவில்லை என்று பாலாஜி கூறினார். சனம், அனிதா ஆகியோர்கள் பாலாஜி கூறியது உண்மைதான் என ஆரிக்கு சப்போர்ட் செய்தும் ஒரு கட்டத்தில் தான் அவ்வாறு கையை மேலே தூக்கி சொடக்கு போட்டு சொல்லவில்லை என்றும் சாதாரணமாகத்தான் சொன்னதாகவும் பாலாஜி சமாளித்தார்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் குறும்படம் போட்டு பாலாஜி கூறியதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர். அதில் பாலாஜி சொடக்கு போட்டு சொன்ன காட்சி உள்ளது. இதனையடுத்து இந்த வாரம் பாலாஜிக்காக கமலஹாசன் குறும்படம் போடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் என்பது சுவராசியமான ஒன்றாகும். முதல் சீசனில் இருந்து அவ்வப்போது தேவையான நேரத்தில் குறும்படங்களை போட்டு அசத்தி வந்த கமலஹாசன், பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குறும்படம் எதையும் அவர் போடவில்லை. அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் எந்தத் தவறு செய்தாலும் கண்டிப்பு இல்லாமல் அமைதியாகவே அவர் அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கூறி வருகிறார். இதனால் போட்டியாளர்களுக்கு குளிர்விட்டுபோய் எல்லை மீறி செல்வதாக தெரிகிறது.

இதனை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் தன் சுயரூபத்தை காண்பித்து தவறு செய்யும் போட்டியாளர்களை கண்டிக்கும் வகையில் குறும்படம் போட்டு பாலாஜியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது.
 

More News

சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம்: பிரபல நடிகரின் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு!!!

உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகப் போட்டியிடப் போகும் திரைப்படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

ஒரே ராக்கெட்டில் 60 செயற்கைக்கோள்… விண்வெளியில் புது புரட்சி!!!

ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா,

நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்!!!

தூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.