close
Choose your channels

அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே: சம்யுக்தாவை துவம்சம் செய்த ஆரி!

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி மற்றும் அர்ச்சனாவுக்கு வீட்டை பெருக்கும் பிரச்சனை வெடித்தது என்பதும், அதன்பின் தாய்ப்பாசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பாலாஜியை அர்ச்சனா தந்திரமாக தன்னுடைய அணியில் சேர்த்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அர்ச்சனா மீண்டும் தனது வாடிக்கையான பெருக்கல் பிரச்சனையை தொடங்கியுள்ளார். கடந்த முறை அவரே கேப்டனாக இருந்ததால் வேல்முருகனை தூண்டிவிட்டவர் இம்முறை கேப்டன் சம்யுக்தாவை தூண்டிவிட்டு ஆரியை பெருக்க வருமாறு கூறுகிறார். இதனால் ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் பிரச்சனை வருகிறது

ஒரு கேப்டன் ஒரு அணிக்கு சாதகமாக இருக்ககூடாது என்றும், தன்னால் இப்போது பெருக்க முடியாது என்றும், அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு ஏன் என்னிடம் பேசுகிறீர்கள் என்றும் சம்யுக்தாவை ஆரி துவம்சம் செய்ய, சம்யுக்தா வேறு வழியில்லாமல் திரும்பி செல்கிறார்.

அடுத்த வாரம் ஒவ்வொருவரின் ஃபேவரிஸம் குறித்து நெத்தியில அடிச்சமாதிரி சொல்வேன் என்று ஆரி கூறிய நிலையில் அதை இன்றுமுதல் ஆரம்பித்து, ஃபேவரிஸம் செய்யும் குருப்புகளை ஆரி தனது பாணியில் கையாள ஆரம்பித்துவிட்டார். அர்ச்சனா குருப்புக்கு இனிமேல் ஆரி ஒரு சிம்ம சொப்பனம் தான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.