close
Choose your channels

பிரியங்கா குரூப்புக்கு இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு போல! கமலின் ஆவேச புரமோ

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கமல்ஹாசன் வரும் நாள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் என்ற ஒரு குரூப் செய்யும் தந்திரங்கள் மற்றும் பிக்பாஸ் விதிகளை மீறியது ஆகியவற்றைப் பார்த்து வந்தோம். அதைத்தான் இன்று கமலஹாசன் முதல் புரமோவில் கூறியுள்ளார்.

’மாற்றி மாற்றி பேசி உள்ள இருக்கிறவர்களை வேணா ஏமாற்றி விடலாம், ஆனால் வாத்தியை ஏமாற்றவே முடியாது. கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்குது. ஏனென்றால் அவர்கள் உடைத்த ரூல்ஸ் ஏராளம். ஒவ்வொன்றாக கேட்போம்’ என்று கமலஹாசன் கூறும்போது பிரியங்கா குரூப்பில் உள்ளவர்கள் மற்றும் ராஜூ, சிபி மற்றும் அபினய் காண்பிக்கப்படுகிறார்கள். எனவே இன்றைய நிகழ்ச்சியில் ஒரு மிகப்பெரிய சம்பவம் இருக்கிறது என்பதும் குறிப்பாக அபிஷேக், பிரியங்கா மற்றும் நிரூப் குரூப்புக்கு பல அதிரடி கேஎள்விகள் காத்திருக்கின்றது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.