close
Choose your channels

வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் தாமரை!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்கு வாதங்கள் பெருகிவரும் நிலையில் ஒரு கட்டத்தில் உடைந்து அழும் தாமரை வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா குறித்து சக போட்டியாளர்களிடம் தாமரை குற்றம் கூறுகிறார். என்னுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்றே முடிவு செய்து பிரியங்கா பேசுவதாக எனக்கு தெரிகிறது என்று கூறுகிறார். மேலும் ’உன்னிடம் ஆயிரம் குற்றங்கள் இருக்கு, நீ ஏன் அடுத்த ஆளை இப்படி பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? என்னை ஏன் வம்புக்கு இழுத்து கடுப்பைக் கிளப்புகிறாய்? அப்படி என்ன உனக்கு கிடைக்கப்போகிறது? என்று கூறுகிறார்.

இதேபோல் பிரியங்கா தனது தரப்பு நியாயத்தை கூறியபோது, தனக்கு என்று வரும்போது வேற மாதிரி செய்வார் தாமரை என்றும், ஆனால் அவளுக்கு அது புரியவில்லை என்றும் கூறுகிறார்.

இதன் பின்னர் ஒரு கட்டத்தில் தாமரை, வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவதும், அவருக்கு வருண் ஆறுதல் கூறுவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இதுவரை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த நற்பெயரை பிரியங்கா இழந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.