'கண்கள் எப்போதும் பொய் சொல்லாது': காந்தக்கண் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி!

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருந்த ஷிவானி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் சிங்கப்பெண்ணாக வெளியே வந்தது அவரது ஆர்மியினர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நிலையில் ஷிவானிக்கு மட்டும் இன்னும் ஒரு திரைப்படம் கூட ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வழக்கம் போல் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் கிளாமர் மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு கலர்ஃபுல் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் ’கண்கள் எப்போதும் பொய் சொல்லாது’ என்று அவர் கேப்ஷனாக ஷிவானி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புகைப்படத்திற்கு அவருடைய கேப்ஷன் மிகவும் பொருத்தமாக இருப்பதாக பலர் கமெண்ட்ஸ் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கணவர், குழந்தையுடன் பிக்பாஸ் ஆரி பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியுடன் 'நெடுஞ்சாலை' திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஷிவதா. மேலும் 'ஜீரோ' 'அதே கண்கள்' 'மாறா' உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்

இரட்டை குழந்தைகளுடன் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகர்: வைரல் வீடியோ

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காதல்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் பரத்.

பகத் பாசிலை அடுத்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்?

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படமான 'விக்ரம்' குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்? என்ன காரணம்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடப் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.

ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரிந்ததே.