'இரு உனக்கு பாம் வைக்குறேன்': ஷிவானி பதிலுக்கு பாலாவின் ரியாக்சன்

  • IndiaGlitz, [Saturday,February 20 2021]

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் ’காதல் கண்ணை மறைக்கிறது என்று ஆரியே விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களது நெருக்கம் இருந்தது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. மேலும் ஷிவானியை பாலா கண்டெண்ட்க்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்து வந்தன

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பாலா-ஷிவானி உறவு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் ஷிவானியிடமே ரசிகர் ஒருவர் பாலாவின் நட்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ’அவர் எனக்கு நல்ல நண்பர் மற்றும் போட்டோபாம்பர் (photobomber ) என்று ஷிவானி பதில் கூறியுள்ளார்

ஷிவானியின் இந்த பதிலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியாக்சன் செய்த பாலாஜி ’நான் போட்டோபாம்பரா? இரு உனக்கு பாம் வைக்குறேன்’ என்று காமெடியாக கூறியுள்ளார். ஷிவானி மற்றும் பாலாவின் இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது