close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கு ஷிவானியின் மெசேஜ்!

Thursday, January 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேல் ரசிகர்களின் அதிருப்தியை பெற்ற போட்டியாளர் ஷிவானி என்பதும் ஆனால் அதன் பின்னர் ரோப் டாஸ்க் மூலம் திடீரென தனது முழு திறமையும் காண்பித்து சிங்கப்பெண்ணாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஷிவானியின் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளி வரும் என்பதும் அவரது இந்த புகைப்படத்திற்காக அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பதும் தெரிந்ததே

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் திடீர் திருப்பமாக தான் பதிவு செய்திருந்த கவர்ச்சி புகைப்படங்களை நீக்கிய ஷிவானி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் டீசன்டான, அழகான புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வருகிறார்

இந்த நிலையில் சற்று முன் அவர் நவநாகரீக டீசன்டான உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’ஆல் இஸ் வெல்’ என்ற மெசேஜையும் தனது ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்றும் பலர் ’சிங்கப் பெண்ணே’ என்றும் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஒரு நெட்டிசன், ‘ஆரியுடன் அடிக்கடி டச்சில் இருங்கள்’ என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.