close
Choose your channels

எனக்கும் ஆரிக்கும் நடந்த உரையாடல்: சுரேஷ் தாத்தாவின் டுவீட் வைரல்!

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர் என்பதை பார்த்தோம். கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா மட்டும் வீட்டிற்குள் ஏன் வரவில்லை என ஏராளமான ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, கடைசி நாளான நேற்று சுரேஷ் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆனார் .

அவருடைய காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது என்றாலும் பாலாஜிக்கு அவர் ஆறுதல் கூறிய காட்சிகள் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், ‘பிக் பாஸ் வீட்டில் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவாக இருந்தாலும் அது போதுமானதாகவும் திருப்தியாகவும் இருந்தது. அந்த வீட்டில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக எனக்கும் ஆரி பிரதர் அவர்களுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் அழகாக இருந்தது. இது போன்ற ஒரு திருப்தியை நான் இதுவரை பார்த்ததில்லை. மேலும் உங்கடைய உங்களின் பலரின் கோரிக்கைகளும் நிறைவேறியது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.

ஆரி குறித்து சுரேஷ் பதிவு செய்துள்ள இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.