எனக்கும் ஆரிக்கும் நடந்த உரையாடல்: சுரேஷ் தாத்தாவின் டுவீட் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர் என்பதை பார்த்தோம். கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா மட்டும் வீட்டிற்குள் ஏன் வரவில்லை என ஏராளமான ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, கடைசி நாளான நேற்று சுரேஷ் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆனார் .

அவருடைய காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது என்றாலும் பாலாஜிக்கு அவர் ஆறுதல் கூறிய காட்சிகள் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், ‘பிக் பாஸ் வீட்டில் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவாக இருந்தாலும் அது போதுமானதாகவும் திருப்தியாகவும் இருந்தது. அந்த வீட்டில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக எனக்கும் ஆரி பிரதர் அவர்களுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் அழகாக இருந்தது. இது போன்ற ஒரு திருப்தியை நான் இதுவரை பார்த்ததில்லை. மேலும் உங்கடைய உங்களின் பலரின் கோரிக்கைகளும் நிறைவேறியது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.

ஆரி குறித்து சுரேஷ் பதிவு செய்துள்ள இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விராட் கோலி பேபியை கொஞ்சும் அமுல் பேபி… வைரல் டிவிட்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

நடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்!!!

ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

என்னோட கேரியரே போச்சு: பிக்பாஸ் தமிழ் பிரபலம் 

கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையும் நிலையில் நாளை இந்த போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரியவரும். ஆரி, பாலாஜி, ரம்யா,கேபி சோம் மற்றும் ரியோ

'மாஸ்டர்' முதல் நாள் முதல் காட்சி பார்த்த தளபதி விஜய்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தது

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.