close
Choose your channels

மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டாரா?

Saturday, August 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பை பொதுவாக ஞாயிறு அன்றுதான் கமல் அறிவிப்பார். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக இன்றே போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா வெளியேற்றப்பட்டதாக இன்றைய புரமோ வீடியோவின் காட்சியில் உள்ளது.

மதுமிதா கையில் காயம் இருப்பதும், நீங்கள் செய்த தியாகம் அஹிம்சை முறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கமல் கூறுவதும், 'மதுமிதா எடுத்த முடிவு தவறான முடிவு, தவறான முன்னுதாரணம் என சேரன் கூறியதையும் வைத்து பார்க்கும்போது மதுமிதா உனர்ச்சிவயப்பட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

அடுத்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்ட மதுமிதா தனது அவசர குணத்தாலும் சின்ன விஷயத்திற்கு உணர்ச்சிவசப்படுவதாலும் வெளியேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக அவரது உணர்ச்சியை வனிதா கொஞ்சம் அதிகமாகவே தூண்டிவிட்டதாகவும் தெரிகிறது. இந்த வாரம் அபிராமிதான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக மதுமிதா வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றத்திற்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos