வெறித்தனமான கட்டிப்பிடி: சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்?

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார். இந்த வெற்றியால் துள்ளி குதித்த வேல்முருகன் தனது கூட்டாளி சனம்ஷெட்டியை கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

சனம் ஷெட்டியை முதல் நாளில் இருந்தே சகோதரி என்று தான் வேல்முருகன் அழைத்து வருகிறார் என்பதும் அண்ணா என்று அன்புடன் சனம்ஷெட்டியும் பதிலுக்கு அழைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இருவரும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாடலுக்கு நடனமாடியபோது கூட எல்லை மீறவில்லை.

ஆனால் நேற்று வேல்முருகன், வெறித்தனமாக சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது சனம்ஷெட்டியையே கொஞ்சம் நெளிய வைத்தது. மேலும் பார்வையாளர்களும் வேல் முருகன் கொஞ்சம் கொஞ்சம் ஓவராக போகிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் சகோதரி போல் என்றாலும் இப்படி வெறித்தனமாகவா கட்டிப்பிடிப்பது என்று பார்வையாளர்களும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

ஒரு சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கும் சனம்ஷெட்டி இந்த விஷயத்தையும் பெரிதாக்குவாரா? அல்லது அவருக்கு பாலாஜி மட்டும் தான் டார்கெட்டா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

More News

'நமத்து போன பட்டாசு': அவார்டு கொடுத்து தூண்டிவிட்ட அர்ச்சனா: 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதுவரவாக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கலக்கிவிட்டார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை!!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்!!!

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்வதற்குத் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளே காரணம் எனப் புகழப்படுகிறது.

டிரைவரே இல்லாமல் சாலையில் ஒடிய கார்… மண்டையைப் பிய்த்துக் கொண்ட பயணிகள்!!! நடந்தது என்ன???

நமது தமிழகத்தின் எங்கோ ஒரு நெடுஞ்சாலையில் பழைய மாடல் கார் ஒன்று, டிரைவரே இல்லாமல் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது

ஒரு வருஷமா கழிவறைக்குள் அடைக்கப்பட்ட பெண்… கணவனின் வெறிச்செயல்!!!

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது