பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு மீண்டும் காதலா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காஜல் பசுபதி. அதன் பின்னராக இதயத்திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, சிங்கம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட காஜல் பசுபதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அரசியல்வாதிகள் உள்பட பலரையும் அவர் கலாய்த்து பதிவு செய்யும் டுவிட்டுக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், ’விட்டரில் சில நாட்கள் பேசிக்கொண்டிருந்தேன், நேற்று என்னுடைய காதலை சொல்லி விட்டேன், இன்று அக்செப்ட் பண்ணிட்டான்’ என்று தனது டுவிட்டர் காதல் குறித்து கூறியுள்ளார்.

இதனை அடுத்து காஜல் பசுபதிக்கு மீண்டும் காதல் தோன்றியுள்ளதா? அல்லது வழக்கம் போல யாரையாவது கலாய்க்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அவருக்கு மீண்டும் உண்மையிலேயே காதல் வந்து இருந்தால் அதற்கு தங்களது வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மதுவுக்கு விளம்பரம் செய்யும் பிரபல நடிகைகள்: 'பீஸ்ட்' நடிகையுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகி உள்பட பல நடிகைகள் தற்போது மதுவுக்கு விளம்பரம் செய்து வருவதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

அர்ஜூன் மீது பிரபல நடிகை சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு!

ஆக்சன் கிங் அர்ஜுன் மீது பிரபல நடிகை ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியிடம் மறைத்த விஷ்ணு விஷால்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவாகிய விஷ்ணு விஷால் தனது மனைவியிடம் முக்கிய விஷயத்தை மறைத்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் எனக்கு பிச்சை போட்டிருக்காங்க: நிரூப்பிடம் அபிஷேக் ஆவேசம்!

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்கிறார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதற்காக நான் என்னை கொளுத்தி கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று நிரூப் இடம் அபிஷேக்

மாநாடு- 2  உருவாக்கப்படுமா? பதில் அளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கும்