தாமரைக்கு மிகச்சரியான அட்வைஸ் கொடுத்த ராஜூபாய்: இனிமேலாவது திருந்துவாரா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைசெல்வி அப்பாவியான போட்டியாளர் என்றும் கள்ளங்கபடமில்லாத போட்டியாளர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென கடந்த சில நாட்களாக அவரது உண்மையான கேரக்டர் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டதாகவும், எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும், விளையாட்டை புரிந்து கொள்ளாமல் அவர் நடந்து கொள்வதாகவும் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் அவர் நாமினேஷன் இல்லை என்பதால் தப்பித்தார் என்றும் அடுத்த வாரம் நாமினேஷனில் சிக்கினால் கண்டிப்பாக அவர் வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாமரைக்கு மிகச்சரியான அட்வைஸ் ஒன்றை ராஜுபாய் செய்துள்ளது இன்றைய 2-வது புரமோவில் உள்ளது. நீ ரொம்ப தெரியாமல் பேசி வருகிறாய். ஓரளவுக்குத்தான் சகித்துக்கொள்ள முடியும். உடனே கதவை திறந்துவிடுங்கள், வெளியே போய் விடுவேன் என்று கூறுகிறாய். திறந்துவிட்டால் வெளியே போய் விடுவாயா?

ரொம்ப யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓவராக செய்யாதே. எல்லாருக்கும் உன்னை பிடிக்கும். ஆனால் இவர் எப்போதுமே கத்திக்கொண்டே இருக்கிறார் என்று வெளியே பார்ப்பவர்களுக்கு தெரியும். எனவே நீ நியாயமாகவே நடந்திருந்தாலும் வெளியே நியாயமாக தெரியாது என்று சரியான அட்வைஸ் கொடுக்கின்றார்.

அந்த அட்வைஸை ஆழ்ந்து கவனித்துக் கொள்ளும் தாமரை அதன்படி நடந்து கொண்டு இனிவரும் நாட்களில் சரியாக கேமை புரிந்துகொண்டு விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.