close
Choose your channels

ஸ்ருதி ஆட்டம் ஆரம்பம்: தாமரை செல்வியை கதற வைத்ததால் பரபரப்பு!

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த பஞ்ச தந்திரம் என்ற டாஸ்க்கில் 5 காயின்கள் வழங்கப்பட்டது என்பதும் அந்த ஐந்து காயின்கள் தாமரை, இசைவாணி, வருண், பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகியோர் கையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த காயின்களை வைத்து போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படும் போது தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதும் அதேபோல் கேப்டனாகவும் தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற சலுகை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் காயின்களை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் வேறு யாராவது அதை திருடினால் திருடும் நபர்களுக்கு அந்த காயின் சொந்தமாகும் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் தாமரையின் காயினை ஸ்ருதி எடுத்து விடுகிறார். இதனை அடுத்து ஸ்ருதியுடன் தாமரை சண்டைக்கு செல்ல ‘இது ஒரு கேம், காயின்களை திருடலாம் என்பது விதிகளில் ஒன்று. எனவே நீங்கள் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று கூற, தாமரைச்செல்வி கதறி அழுகிறார்.

ஸ்ருதி தற்போது மிகச் சரியான கோணத்தில் ஆடத் தொடங்கி விட்டார் என்பதும் அவரது முதல் குறி தாமரைச்செல்வி ஆக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.