தர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,September 15 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தர்ஷன். கடும் போட்டியாளராக ஆரம்பத்தில் இருப்பவர் இவர்தான். எத்தனை முறை எவிக்சன் பட்டியலில் வந்தபோதிலும் அதிக வாக்குகள் பெற்று முதலில் காப்பாற்றப்படும் நபரும் தர்ஷன் தான். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் குணம், குறிப்பிட்ட ஒருவரை கார்னர் செய்யாமல் நியாயமாக நடந்து கொள்வது, விட்டுக்கொடுக்கும் இடத்தில் விட்டுக்கொடுத்து போட்டி கொடுக்கும் இடத்தில் போட்டி கொடுப்பது ஆகியவை தர்ஷனின் குணங்களாக உள்ளது.

இந்த நிலையில் இன்று தர்ஷனின் பிறந்த நாள் ஆகும். இன்றைய பிறந்த நாளில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்தவருமான அபிராமி தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இன்று தர்ஷனின் பிறந்த நாள். அவருக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்கள். தர்ஷ் மச்சான் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.

More News

அடுத்தடுத்து வெளியேறுவது யார்? கமல் கேள்வியால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் படலம் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்

சூர்யாவின் 'காப்பான்' ரன்னிங் டைம்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும்

நயன்தாராவுக்காக ரஜினியிடம் அனுமதி பெற்ற விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில்

'பேனர்' வைப்பதற்கு பதிலாக இதை செய்யுங்கள்! நடிகர் சூர்யா வலியுறுத்தல்

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானார்.

பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்களை அடுத்து விஜய் அதிரடி அறிவிப்பு!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவம் பலரை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்