close
Choose your channels

மதுமிதாவை அடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

Sunday, August 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தனது அவசர குணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது செயலை கமல்ஹாசனும் சேரனும் நாகரீகமாக கண்டித்தனர். மதுமிதா ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டதாக இருவரும் வருத்தப்பட்டனர். மதுமிதா தனது தவறை தற்போது புரிந்து கொள்ளாவிட்டாலும் வரும் நாட்களில் அவர் தனது செயலை தானே அலசிப்பார்த்து புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கமல் தெரிவித்தார்.

இந்த நிலையில் எவிக்சன் பட்டியலில் இருந்த மதுமிதா வெளியேற்றப்பட்டதால் இந்த வாரம் ஞாயிறு அன்று எவிக்சன் இருக்காது என்றே பார்வையாளர்களும் போட்டியாளர்களும் கருதினர். ஆனால் மதுமிதா வெளியேற்றப்பட்டது வேறு காரணத்திற்காக என்பதால் வழக்கம்போல் இன்றைய நிகழ்ச்சியில் எவிக்சன் உண்டு என்று கமல் நேற்றே தெரிவித்திருந்தார். அதை இன்றைய முதல் புரமோவிலும் உறுதி செய்தார்.

உணர்ச்சிகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும், உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது என்ற அறிவுரையுடன் ஆரம்பித்த கமல் இன்று எவிக்சன் உண்டு என்பதை உறுதி செய்ததோடு இன்று வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளரையும் அறிவிக்கின்றார். இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற அபிராமி வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.