பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அபிராமி வெளியிட்ட வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐவர் எவிக்சன் பட்டியலில் இருந்தபோதிலும் அபிராமிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் பிக்பாஸ் விதியின்படி அவர் வெளியேறினார். வனிதாவின் பேச்சை கேட்டு முகினிடம் அவர் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகள், தொடர்ச்சியான அழுகைகள் பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்ததால் அவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்தது.

இந்த நிலையில் அபிராமி வெளியே வந்தவுடன் முதலில் அவர் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்றுமுன் அபிராமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நன்றி வீடியோ. அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய ஆதரவு, அன்பு, வாக்குகள், நம்பிக்கை, இவையனைத்தையும் அளித்த உங்கள் எல்லோருக்கும் நாம் ரொம்பவே கடமைப்பட்டுள்ளேன். ரொம்ப நன்றி' என்று பதிவு செய்துள்ளார். அபிராமியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
 

More News

'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் அசத்தலான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,

'96' த்ரிஷாவுக்கு நெருக்கமாகும் அனுபமா பரமேஸ்வரன்

விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த '96' படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது 'ஜானு' கேரக்டர்தான். இந்த கேரக்டர் இன்னும் பல ஆண்டுகளுக்கு பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாத ஒரு கேரக்டராக இருக்கும்

யோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்!

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

விஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி!

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும்  'தர்பார்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார். இந்த படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஜெய்ப்பூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது