close
Choose your channels

வனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்?

Monday, September 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர் என நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று வனிதா வெளியேறுவதற்கு முன் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் மூவர் யாராக இருக்கும் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு போட்டியாளர்கள் கூறிய பதில் இதோ:

சாண்டி: வனிதா, ஷெரின், சாண்டி அல்லது கவின்
கவின்: வனிதா, கவின், சேரன்
சேரன்: சேரன், சாண்டி, தர்ஷன்
முகின்: கவின், வனிதா இன்னொருவர் யார் என தெரியவில்லை
தர்ஷன்: வனிதா, கவின், லாஸ்லியா
ஷெரின்: கவின், லாஸ்லியா, ஷெரின் அல்லது வனிதா
வனிதா: வனிதா, ஷெரின், லாஸ்லியா
லாஸ்லியா: கவின், வனிதா, லாஸ்லியா

இந்த கணிப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே வனிதா வெளியேறுவார் என்று கூறினர். அந்த கணிப்புப்படி நேற்று வனிதா வெளியேறிவிட்டார். வனிதாவை அடுத்து வெளியேறும் போட்டியாளர்கள் இந்த கணிப்பின்படி இருக்குமா? அல்லது வித்தியாசமாக இருக்குமா? என்பது மக்களின் கையில் தான் உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.