கஸ்தூரி, வனிதாவை சிறைக்கு அனுப்ப திட்டமிடும் சேரன்! மூவர் கூட்டணியில் குழப்பம்

பிக்பாஸ் வீட்டில் வனிதா, கஸ்தூரியின் வரவுக்கு பின் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் சேரன், வனிதா, கஸ்தூரி ஆகிய மூவர் கூட்டணி ஒருபுறமும், கவின், லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் தர்ஷன் ஆகிய ஐவர் கூட்டணி இன்னொரு புறமும் உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய பள்ளி டாஸ்க்கின்போது திடீரென வனிதா, கஸ்தூரி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். ஒரு பள்ளி குழந்தைக்கு போராட எப்படி தெரியும்? எனவே அவரை வொர்ஸ்ட் பெர்மார்மர் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று ஷெரினிடம் சேரன் கூறுகிறார். அதேபோல் கஸ்தூரி டீச்சர் கேரக்டரை சரியாக செய்யவில்லை என்பதால் அவரையும் வொர்ஸ்ட் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று சேரன், தர்ஷனிடமும் கூறிவருகின்றார்.

நாளை நடைபெறவிருக்கும் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் பெர்பார்மர் பட்டியலை இன்றே தயாரிக்க சேரன் முடிவு செய்ததில் இருந்து வனிதா, கஸ்தூரியை அவர் ஜெயிலுக்கு அனுப்ப திட்டமிடுவதாகவும் இதனையடுத்து மூவர் கூட்டணி மூன்றாக உடைந்துவிட்டதாகவும் தெரிகிறது. மேலும் ஏற்கனவே வனிதாவும் கஸ்தூரியும் பிக்பாஸ் வீட்டில் முட்டிக்கொண்டு இருக்கின்றனர். நேற்று கூட தான் குண்டாக இருப்பதை கஸ்தூரி சுட்டிக்காட்டியதாக வனிதா கோபம் அடைந்தார். இந்த நிலையில் இருவரும் ஜெயிலுக்கு சென்றால் ஜெயில் என்ன ஆகுமோ என்றே நினைக்க தோன்றுகிறது.

More News

வெள்ளத்தில் சிக்கிய தனுஷ் பட நாயகி! காப்பாற்றிய முதலமைச்சர்

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றிருந்தபோது திடீரென வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.

என்ன ஆச்சு வனிதாவுக்கு? பள்ளி டாஸ்க்கில் திணறல்

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடந்து வரும் பள்ளி டாஸ்க் பார்வையாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கஸ்தூரியின் டீச்சர் கெட்டப்பும் அவரது செயல்பாடுகளும்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகை

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

டைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்

ஒரு படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், ஆகியவற்றை அந்த படத்தின் குழுவினர் சஸ்பென்ஸ் வைத்து ஒரு சரியான தேதியில் வெளியிடுவதே தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.

சரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்: சயிர நரசிம்மரெட்டி டீசர் விமர்சனம்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இணையாக இன்னொரு திரைப்படம் இந்தியாவில் வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில்