close
Choose your channels

'வாடா' 'போடா' 'லூசு' 'போப்பா': எல்லை மீறும் சரவணன், பொறுமை இழக்கும் சேரன்

Friday, August 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் சேரனை சரவணன் அநாகரீகமாக பேசியது அனைவரையும் அதிர வைத்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய இரண்டாவது புரமோவிலும் அவர் எல்லை மீறி பேசியுள்ளார். முதல் புரமோவில் அமைதியாக இருந்த சேரனும் பதிலுக்கு சரவணனிடம் எகிறுகிறார்

சேரன் லூசு மாதிரி பேசுவதாக சரவணன் கூறியதை சேரன் கண்டிக்கின்றார். தர்ஷனும் சேரனுக்கு ஆதரவாக பேசுகிறார். அதன்பின் கொஞ்சம் தடுமாறும் சரவணன், 'நீ', 'போப்பா' போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இருந்தும் சேரன், சரவணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையில் இருந்து தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சேரனை சரவணன் மரியாதைக்குறைவாக பேசியபோது தர்ஷன், மதுமிதா உள்பட ஒருசிலர் சரவணனை கண்டிக்கின்றனர். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு தர்ஷன் அறிவுரை கூறுகிறார். ஆனால் சேரனை 'அப்பா' 'அப்பா' என்று கூறும் லாஸ்லியா அமைதியாக இருப்பது முரண்பாடாக தெரிகிறது.

சரவணனின் இன்றைய நடவடிக்கையை நாளை கமல் கண்டிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருசிலர் தவிர ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் சேரனுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சேரன், சரவணன் சண்டையால் கவின், சாக்சி விஷயம் மறக்கப்பட்டது ஒரு நிம்மதியே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.