close
Choose your channels

தர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் தங்கள் காதல் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு டாஸ்க்கில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுத்தனர். இருப்பினும் அவ்வப்போது இருவரும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவருக்கு அடிபடும் போது இன்னொருவர் ஆறுதல் கூறி வந்ததோடு, ஒருவருக்காக இன்னொருவர் பரிந்து பேசி வாதங்கள் செய்வதும் நடந்து வந்தது.

குறிப்பாக லாஸ்லியாவிற்கு அடிபட்டபோது சாண்டியிடம் கவின் வாதம் செய்தது மற்ற போட்டியாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதேபோல் டாஸ்க்கின்போது இடையிடையே கவின், லாஸ்லியாவிடம் பேசியது ஷெரினை எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கவினிடம், ‘நீங்கள் டாஸ்க்கை டாஸ்க்காக பார்த்தீர்களா? என்ற கேள்வியை கமல் எழுப்பினார். அதற்கு கவின் ’லாஸ்லியாவை முதலில் முகின் தள்ளிவிட்டதாகவும் அதன்பின்னர் சாண்டியும் தள்ளி விட்டதால் தான் உணர்ச்சிவசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட கமல், தர்ஷனுக்கு கையில் அடிபடும்போது ஏன் உணர்ச்சி வசப்படவில்லை? என்ற கேள்விக்கு கவினால் பதில் சொல்ல முடியவில்லை. கமலின் இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத கவின் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி அமைதியாக இருந்தார். 

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி கமல்ஹாசனால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.